நடந்து முடிந்த தேர்தல்களில் எமக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் – தேசிய நல்லிணக்க, மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ வி.முரளிதரன்.

August 17, 2009

arthmikka by you.

கடந்த முப்பது வருடகால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, சுகந்திர இலங்கை மண்ணில், சுகந்திரமான முதலாவது தேர்தல்களை சந்தித்த யுத்த வெற்றியின் பரிசாக எமது நாட்டின் தலைவரும், எமது மக்களின் சுகந்திர விடுதலையில் அக்கறை கொண்டு Read more »

மட்டு மாநகர கால்பந்தாட்ட அணியும், இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் மட்டக்களப்பு வலய கால்பந்தாட்ட அணியும் சிநேகபூர்வமாக மோதிக்கொண்டன.

August 11, 2009

art 0001

மட்டக்களப்பு மாநகரசபையின் “உள்ளுராட்சி வாரம் 2009” இரண்டாவது நாளான 04.08.2009 அன்று பி.ப 2.30 மணியழவில,; மட்டு மாநகரசபைக்குட்பட்ட பாலர் பாடசாலைகளின் மழலைகளின் விளையாட்டு நிகழ்வு Read more »

புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோயில் புத்த பிக்குகளின் பிடியில் !!

August 11, 2009

306306b65a6528a599889efb8014b240இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோயிலை புத்த பிக்குகள் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் அருகே சிறிய புத்தர் கோயிலையும் கட்டியுள்ளனர். இது இலங்கையில் வசிக்கும் தமிழர்களை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள கதிர்காமத்தில் உள்ள Read more »

கே.பி யின் கைதும் அதன் பின்னரான அரசியல் தீர்வும்.

August 8, 2009

KP New by you.

புலிகள் இயக்கத்தின் தற்போ தைய தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திய கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்ம நாதன் வெளிநாடொன்றில் கைது செய்யப் பட்டு விசாரணைக்காக இலங்கைக்குக் கொண் டுவரப்பட்டிருக்கின்றார். பயங்கரவாதத்து க்கு எதிராக Read more »

கிழக்கு மண்ணிற்கும், கிழக்கு மக்களுக்கும் பெருமை தேடித்தந்த பாவற்கொடிச்சேனை செல்வி.அமிர்தலிங்கம் யசோதா.

August 7, 2009

IMG_2421

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில், கலந்துகொண்டு மட்டக்களப்பு மண்ணிற்கே பெருமை தேடித்தந்த எமது மண்ணின் மாணவி, காந்தி நகர், பாவற்கொடிச்சேனை, உன்னிச்சையை பிறப்பிடமாகக் கொண்ட செல்வி.அமிர்தலிங்கம் யசோதாவிற்கு இன்று எமது தமிழினமே வாழ்த்துக் கூறி நிற்கிறது. தேசிய இளைஞர் விளையாட்டு Read more »

தமிழர்களை ஏலம் போடும் தமிழ்த்தலைமைகளும் ஊடகங்களும் – அருகன்

August 5, 2009

karuna_21“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” ஈழம் பெற்றெடுத்த பல தவப்புதல்வர்கள் மாபெரும் சாதனைகளை உலகளாவிய ரீதியில் மேற்கொள்கின்றபோது, தாயின் பெயரைச் சொல்லி தம்மைத்திடப்படுத்துவோர்கள் அவர்களின் பெருமையினையிட்டு அடிவயிறு இனிக்காதோ??? மாறாக, Read more »

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளரே தங்களின் மேலான கவனத்திற்கு.

August 5, 2009

Picture 023

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட பன்சாலை மேற்கு வீதியில் உள்ள குறுக்கு வீதிகளில் ஒன்றான முதலாம் குறுக்கு வீதியில் சுமார் ஐந்து(5) குடும்பங்கள் வசித்துவருவது அனைவரும் அறிந்த ஒன்று. இவற்றினுள் வே.கங்காதரன் என்பவரின் காணியும், பரசுராமன் ஞானம்மா(சந்திராவதி என்பவரின் தமக்கை) என்பவரின் காணியும் அமைந்துள்ளது., ஆனால் அக்குறுக்கு வீதியில் வசிக்கும் ஐந்து குடும்பங்களின் அசௌகரியங்களை கருத்திலெடுத்து வே.கங்காதரன் என்பவர் அவிவீதியினை அகட்டிக்கொடுப்பதற்கு பெருந்தன்மையுடன் முன்வந்திருந்த போதிலும், ஆலையடிவேம்பு பிரதேச இணக்கசபை பிரதித்தலைவரும், உதவி பிரதேச செயலாளருமாகிய பரசுராமன் என்பவரின் மனைவியும், வங்கி ஊழியருமாகிய பரசுராமன் Read more »

சித்தாண்டி சிறிலங்கா சுகந்திரக்கட்சியின் மக்கள் பணிமனைக்கு அமைச்சரும், கட்சியின் பிரதித்தலைவருமாகிய கௌரவ அம்மான் அவர்கள் விஜயம்.

August 5, 2009

Picture 135

அண்மையில் சிறிலங்கா சுகந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும், தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சருமாகிய கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்கள். இந்த விஜயத்தின்போது அமைச்சர் அவர்களின் வெகுஜன தொடர்பாளர் திரு.ரஞ்சன் அவர்களும், ஊடக செயலர் திரு.ஜூலியன் அவர்களும் சென்றிருந்தனர். சித்தாண்டி பிரதேச சுகந்திரக்கட்சி அமைப்பாளர் திரு.சீலன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாக இயங்கிவரும் அம் மக்கள் பணிமனையின் குறைபாடுகளை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டதுடன், அங்கிருந்தவாறே பொதுமக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்து அதற்கான தீர்வுக்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்கள். இந்நிகழ்வில் சித்தாண்டி மக்கள் பணிமனைப் பொறுப்பாளர் திரு.சின்னவனும் பிரசன்னமாகியிருந்திருந்தார்.

Picture 134

தகவல்: சித்தாண்டி தமிழலை நிருபர்கள்.


மண்முனை தென் எருவில்பற்று சிவில் பாதுகாப்பு குழு தலைவராக திரு.உ.உருத்திரன் (வீரா) தெரிவு.

August 5, 2009

Picture 007

அண்மையில் மண்முனை தென் எருவில்பற்று சிவில் பாதுகாப்புக் குழு தலைவராக திரு.உ.உருத்திரன்(வீரா) அவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள், அத்தோடு அவர் சிறிலங்கா சுகந்திரக்கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச அமைப்பாளராக அண்மையில் அலரி மாளிகையில் வைத்து அதி உத்தம ஜனாதிபதியிடமிருந்து நியமனத்தினைப் பெற்றுக்கொண்டார். மேலும் இவர் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) அவர்களின் மேற்படி பிரதேச இணைப்பாளராக அப்பகுதி மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்:

தமிழலை சித்தாண்டி நிருபர்.


அம்பாறை மாவட்ட தம்பிலுவில் பிரதேச “சிவதொண்டர் அமைப்பு” கிழக்கின் விடிவெள்ளி கௌரவ கருணா அம்மானிடம் விடுக்கும் மன்றாட்டான வேண்டுகோள்.

August 5, 2009

nataraj1

சிவதொண்டர் அமைப்பு –

அம்பாறை மாவட்டம், தம்பிலுவில்.

எமது அமைப்பானது 1999 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சமய, சமூக கலாச்சாரப்பணிகளை செய்து வருகின்றது. இவ்வமைப்பானது 2004 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பல்வேறு சேவைகளை செய்துவருகிறது மேலும் இவ்வமைப்பின் பாரிய சேவை கல்முனை தொடக்கம் யால வரையான காட்டுப்பகுதிகளில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து வருவது வழக்கமாகும். இச்சேவையினை 2001 ம் ஆண்டு தொடக்கம் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சிறி உகந்தை மலை முருகன் ஆலயத்தின் உற்சவ காலத்தில் ஆலய அலங்கரிப்பு, மற்றும் சிரமதான பணிகளை செய்து வருவது வழக்கமாகும். சிவதொண்டர் அமைப்பின் சேவைகளின் விபரம்.

1. ஆலய உற்சவ காலங்களில் ஆலய அலங்கரிப்பு, தோறணம் அமைத்துக் கொடுத்தல், சிரமதானம் செய்தல்.

2. குடிநீர் தட்டுப்பாடான பகுதிகளுக்கு குடிநீர் வழங்குதல். 3. இளைஞர் யுவதிகளுக்கான பண்புப்பயிற்சிப் பட்டறை நடாத்துதல்.

4. மாணவ மாணவிகளுக்கான இலவச மேலதீக வகுப்புக்கள் நடாத்துதல்.

5. இந்து ஆலயங்களிலும், இந்துக்களின் இல்லங்களிலும் பஜனைகள், வழிபாடுகள் மேற்கொள்ளுதல்.

6. மரணவீடுகள், திருமண வீடுகளுக்கு உதவிகள் வழங்குதல். 7. வசதிகளற்ற மாணவர்களுக்கு உதவிகள் செய்தல்.

8. வசதிகளற்ற குடும்பங்களுக்கு உதவிகள் செய்தல். மேலும் எமது சேவையானது இவ்வருடம்(2009) உகந்தை மலை முதல் கல்முனை வரைதான் சேவையாற்ற பாதுகாப்புத்தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

எனவே இச்சேவையினை திறம்பட செய்வதற்கு, கல்முனை – யாலை வரை அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இனிவரும் காலங்களில் இவ்வனுமதியை பெற்றுத்தரும்படி, அம்பாறை மாவட்ட சிறி லங்கா சுகந்திரக்கட்சி அமைப்பாளரும், அதிஉத்தம ஜனாதிபதி அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமாகிய திரு.இனியபாரதி

அவர்கள் ஊடாக “கிழக்கின் விடிவெள்ளி” தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) அவர்களை மன்றாட்டாக எமது அமைப்பு சார்பாக கேட்டு நிற்கின்றோம்.

இவ்வண்ணம்

தலைவர்

எஸ்.ரட்ணசிங்கம்

சிவதொண்டர் அமைப்பு, தம்பிலுவில்.

“சேவையே பூஜை, மக்களே தெய்வம்”

நன்றி.